விடுதலை புலிகளின் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்தவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்பிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் பணிப்பு!

ஆசிரியர் - Editor I
விடுதலை புலிகளின் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்தவர்கள் தொடர்பில் அறிக்கை சமர்பிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் பணிப்பு!

தமிழீழ விடுதலை புலிகளினால் இறுதி யுத்தகாலத்தில் புதைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரு அமைச்சுக்களின் ஒருங்கிணைப்பு செயலாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் அந்த பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் கடந்த 2ம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 

தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே 

அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அன்றைய தினம் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதிக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் 03.12.2021க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைய 03.12.2021 மீண்டும் அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்றன. இந்நிலையில் குறித்த குழிகளுக்குள் வெள்ளநீர் தேங்கி அதனை அகற்ற முடியாத நிலை உருவானதாலும் கனரக இயந்திரம் நிலத்தினில் புதையுண்டதாலும் அகழ்வுப்பணிகள் பாதியில் இடைநிறுத்தப்பட்டதோடு 

மீண்டும் குறித்த அகழ்வுப் பணி 06.12.2021 இன்றைய தினம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய இன்றைய தினம் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்றன. இதன்போது குறித்த இடத்தில் தங்க நகைகள் ஏதும் கிடைக்கவில்லை 

அங்கு கிடைத்த தகரத்துண்டு உரப்பை கயிறு போன்ற பொருட்களை நீதிமன்றில் பாரப்படுத்துமாறும் அகழ்வுப் பணிக்கு முன்னர் குறித்த இடத்தில் அகழ்வு செய்தவர்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா 

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2022.01.25 அன்று இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு