யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் கோர விபத்து! சாரதியை பிடித்து நையப்புடைத்த மக்கள், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி சூடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் கோர விபத்து! சாரதியை பிடித்து நையப்புடைத்த மக்கள், நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி சூடு..

யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் நேற்றைய தினம் இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் 42 வயது மதிக்கதக்க நபர் குறித்த இடத்திலேயே பலியானார். இதனையடுத்து வாகனத்தை துரத்தி சென்ற இளைஞர்கள்

சாரதியை பிடித்து நையப்புடைத்த நிலையில் பெருமளவு பொதுமக்கள் கூடி பதற்றமான நிலையேற்பட்டது. இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.

பின்னர் வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு