யாழ்.மாதகலில் கடற்படை சுவீகரிக்க முயற்சிக்கும் காணி உரிமையாளர்களுடன் ஆளுநர் பேச்சு! ஆவணங்களை பெற்றுக் கொடுக்க பிரதேச செயலர்களுக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் கடற்படை சுவீகரிக்க முயற்சிக்கும் காணி உரிமையாளர்களுடன் ஆளுநர் பேச்சு! ஆவணங்களை பெற்றுக் கொடுக்க பிரதேச செயலர்களுக்கு பணிப்பு..

யாழ்.மாதகலில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்க முயற்சிக்கப்படும் காணி உரிமையாளர்களை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக கலந்துரையாடிய வடக்கு மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தார்.

சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு