யாழ்.மாதகல் காணி அபகரிப்பை எதிர்த்து ஆளுநர் செயலகம் முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் காணி அபகரிப்பை எதிர்த்து ஆளுநர் செயலகம் முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்..!

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினால் பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம். 

இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் மாதகல் காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே, எமது நிலம் எமக்கு வேண்டும், காணிகளை சுவீகரிக்கதே, ஆளுநரே காணி அபகரிப்புக்கு உடந்தையாகாதே போன்ற பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டது.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு