யாழ்.மாதகலில் கொட்டன்களுடன் குவிக்கப்பட்ட கடற்படையினர் மக்கள் மீது அச்சுறுத்தல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகலில் கொட்டன்களுடன் குவிக்கப்பட்ட கடற்படையினர் மக்கள் மீது அச்சுறுத்தல்..!

யாழ்.மாதகல் - குசுமந்துறை பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிப்பிற்காக அளவீட்டு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டதாக கூறப்படுறது. 

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150, பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள், அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை, கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு, 

அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.






 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு