வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம்.! 4ம் திகதிவரை மழை தொடரும், விரிவுரையாளர் ந.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம்.! 4ம் திகதிவரை மழை தொடரும், விரிவுரையாளர் ந.பிரதீபராஜா..

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதுடன், அது புயலாக மாறுவதற்கான வாய்பும் அதிகமாகவுள்ளது. 

இதனால் எதிர்வரும் 4ம் திகதிவரை பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

அந்தமான் தீவுகளுக்கு அருகே புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது புயலாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக உள்ளன. 

எதிர்வரும் 04.12.2021 சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினத்துக்கே அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போதைய நிலைமையின்படி இந்த புயலால் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் நேரடியான பாதிப்பு இருக்காது. 

எனினும் எதிர்வரும் 04.12.2021 வரை அவ்வப்போது பரவலாக மழை கிடைக்கும். எனினும் இன்று இரவு தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரை 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியமாகும்.என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு