தனியார் வங்கி கணக்கிலிருந்து 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை! பொதுமக்களின் உதவியை நாடியிருக்கும் யாழ்.பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
தனியார் வங்கி கணக்கிலிருந்து 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை! பொதுமக்களின் உதவியை நாடியிருக்கும் யாழ்.பொலிஸார்..

யாழ்.உரும்பிராயில் உள்ள வங்கி ஒன்றின் தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரத்திலிருந்து தனியார் ஒருவருடைய வங்கி அட்டையை பயன்படுத்தி 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த நபர்கள் தொடர்பான தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருக்கின்றனர். 

குறித்த நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் சந்தேகநபர்கள் தொடர்பான தகவலை வழங்குமாறு கேட்டுள்ளனர். உரும்பிராயில் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை தொடர்பில் அவர் அறிந்திருந்த நிலையில் 

வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது. அதனை அடுத்து வங்கியை நாடியதுடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கினார். இந்தச் சம்பவம் தொடர்பில் வங்கியின் உதவியுடன் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான ஒளிப்படங்களைப் 

பொலிஸார் பெற்றுக்கொண்டனர். சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படாத நிலையில் பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பழிகக்கார கேட்டுள்ளார்.

குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு