யாழ்.குருநகரிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரு படகுகள் கடலில் மூழ்கியதாக தகவல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரு படகுகள் கடலில் மூழ்கியதாக தகவல்..!

யாழ்.குருநகரிலிருந்து மீன் பிடிப்பதற்கு சென்ற 2 படகுகள் ஆழ்கடலில் மூழ்கியுள்ளதாக குருநகர் மீனவ பிரதிநிதிகள் தொிவித்துள்ளனர். 

வழமைபோல மீன்பிடி நடவடிக்கைகாகச் சென்ற போதே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 

தற்போதைய காலநிலை சிக்கலால் குறித்த ஆபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இரண்டு படகுகளிலும் மீனவர்கள் ஆறு பேர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் கடலில் குதித்து தத்தளித்தபோது அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 

அவர்களை அழைத்து வருவதற்காக குருநகரிலிருந்து மீன்பிடிப் படகுகள் பயணித்திருப்பதாகவும் குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் தத்தளித்த மீனவர்களை கடற்படையினரா இந்திய மீனவர்களா மீட்டார்கள் என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் 

அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு