யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு கௌரவிப்பு விழா..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு கௌரவிப்பு விழா..

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்குவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்.கோண்டாவிலில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது. 

பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆதரவில் கந்தசாமி கருணாகரனின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு பொன்னாடை போர்ந்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 

பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு