யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த விவகாரம்! மீண்டும் பிரதமருக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த விவகாரம்! மீண்டும் பிரதமருக்கு கடிதம்..

பிரதமரின் உத்தரவிற்கமைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவில் தாம் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் இருப்பதால் முக்கிய தகவல்கள் மறைக்ப்பட்டுள்ளதாக உயிரிழந்த மருத்துவ பீட மாணவனின் உறவினர்கள் பிரதமருக்கு மீளவும் கடிதம் அனுப்பியிருக்கின்றனர். 

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திலே மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதாகோவில் வீதி, துன்னாலை வடக்கைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர்கள் கடந்த 17.11.2020 அன்று அவர் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அப்போது கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த வீரசிங்க என்பவர் தற்கொலை என கூறி எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இது தற்கொலை அல்ல கொலை என அவரின் சகோதரனால் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு அறிவித்ததன் விளைவாக 

பிரதமர் மகிந்தராஜபக்ச இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணித்திருந்தார். பொலிஸ்மா அதிபரின் பணிப்பிற்கு அமைய வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதில் நாம் தெரிவித்த பல விடயங்கள் மறைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் அவ் விசாரணைக் குழுவில் கொலையாளிகள் என சந்தேகி்ப்போரின் உறவினர், நண்பர்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே அவர்களை நீக்கி விசாரணைகளை முன் கொண்டு செல்ல உதவுமாறு அவரின் சகோதரன் பிரதமர் மகிந்தராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு