ஊடகவியலாளர் மீது மிலேச்சைத்தனமான தாக்குதுல்..! 3 இராணுவத்தினர் கைது..

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளர் மீது மிலேச்சைத்தனமான தாக்குதுல்..! 3 இராணுவத்தினர் கைது..

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 இராணுவத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று காலை (28) இவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை (27) முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. 

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.  இன்றையதினம் (28) முல்லைத்தீவு நகரில் தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாகவே இராணுவத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு