பனை அபிவிருத்திச் சபை கொழும்புக்கு செல்லாது! யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்..

ஆசிரியர் - Editor I
பனை அபிவிருத்திச் சபை கொழும்புக்கு செல்லாது! யாழ்ப்பாணத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்..

யாழ்.மாவட்டத்திலிருந்து பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது. தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயேதான் செயற்படும் என பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்தார்.

இதன் முதலீடுகளினால் உங்கள் மாகாணத்துக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். அத்துடன் எனது அமைச்சுடன் தொடர்புபட்ட விடயங்களில் உங்களுக்கு எதாவது அநீதிகள் இடம்பெறுமானால் உடனடியாக எனக்கு அறியத்தாருங்கள். 

நான் உங்களுக்கு நீதி வழங்குவேன் என்றார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன 

என கேள்வி எழுப்பிய போது அமைச்சர் ரமேஷ் பத்திரண இவ்வாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு