யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினரின் கேள்விக்கு சுட சுட பதில் கொடுக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வீட்டுக்குள் புகுந்த இராணுவத்தினரின் கேள்விக்கு சுட சுட பதில் கொடுக்கப்பட்டது..

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் ச.சுகிர்தனிடம் இராணுவத்தினர் நேற்று இரவு விசாரணை நடத்தியுள்ளனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வலி.வடக்கு தவிசாளர் ச.சுகிர்தன் வீட்டுக்கு முன்பாக மாவீரர் நினைவேந்தலை ஒட்டி சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு உழவியந்திரத்தில் வந்த இராணுவத்தினர் தவிசாளரை அழைத்து சுடரேற்றிய விவகாரம் தொடர்பில் 

விசாரணை நடத்தியதாகவும் தன்னுடைய வீட்டில் விளக்கேற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தாம் தெரிவித்தாகவும் 

சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு