பீற்றர் இளஞ்செழியனை பொலிஸார் கைது செய்தமை மோசமான அராஜகமாகும்..! சீ.வி.கே.காட்டம்..

ஆசிரியர் - Editor I
பீற்றர் இளஞ்செழியனை பொலிஸார் கைது செய்தமை மோசமான அராஜகமாகும்..! சீ.வி.கே.காட்டம்..

மாவீரர் நாள் நினைவேந்தலை செய்வதற்கு முயற்சித்த பீற்றர் இளஞ்செழியனை கைது செய்தமை மோசமான அராஜகம் என வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சாடியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, பீட்டர் இளஞ்செழியனுடைய மனைவி தனது சகோதரனை இழந்தவர் ஆவார். அவரது சகோதரனை நினைவு கூரவும் அஞ்சலிக்வும் அவருக்கு உரிமை உண்டு.

முல்லைத்தீவில் மட்டும் போலீசார் ஏன் இந்த அராஜகத்தை மேற்கொள்கின்றனர். இவை சமாதானத்தை கட்டியெழுப்புவதையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் அழிக்கின்ற செயலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு