இராணுவத்தின் மிலேச்சைத்தனமான தாக்குதல்..! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
இராணுவத்தின் மிலேச்சைத்தனமான தாக்குதல்..! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு..

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பித்திருக்கின்றது. 

ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இழக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் 

சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் 

சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன. மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு