நபர் ஒருவரால் அழைத்துவரப்பட்டவர்கள் யாழ்.நகரில் விடுதலை புலிகளுக்கு எதிராக போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
நபர் ஒருவரால் அழைத்துவரப்பட்டவர்கள் யாழ்.நகரில் விடுதலை புலிகளுக்கு எதிராக போராட்டம்..!

யாழ்.நகரில் விடுதலை புலிகளுக்கு எதிராக சிறிய குழு ஒன்று போராட்டம் நடத்தியிருக்கின்றது. 

நபர் ஒருவரினால் அழைத்துவரப்பட்ட குழுவினரேன இந்த போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். 

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய கொடிகள் சகிதம் சுகாதார விதிமுறைகள் எவற்றையும் கடைப்பிடிக்காது , 

முக கவசங்கள் கூட அணியாதவாறு வந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின் பற்றாது 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரத்தின் பின்னர் 

அவ்விடத்தில் நிற்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியமையால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து விலகி சென்றனர். 

முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், முக கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து

நீதிமன்றங்களில் முற்படுத்தி நீதிமன்றங்களால் தண்டப்பணம் அறவிடப்படுகிறது. இந்நிலையில் நபர் ஒருவர் எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பேணாது, 

சிறுவர்கள் உள்ளிட்ட சிறு குழு ஒன்றை அழைத்து வந்து போராட்டம் நடாத்திய போது, பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை

அவதானிக்ககூடியதாக இருந்தது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு