நந்திக்கடலில் மலர்துாவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் து.ரவிகரன்..!

ஆசிரியர் - Editor I
நந்திக்கடலில் மலர்துாவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் து.ரவிகரன்..!

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் இன்று அதிகாலை நந்திக்கடலில் மலர்துாவி மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியதுடன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடும் நடாத்தினார். 

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, 

உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், 

சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு