யாழ்.குடாநாட்டிலுள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற நாடாளுமன்றில் யோசனை முன்வைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டிலுள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற நாடாளுமன்றில் யோசனை முன்வைப்பு..

யாழ்.குடாநாட்டிலுள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்றும் யோசனையை பிரபல நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உத்திக பிறேமரத்ன நேற்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.

அத்தகைய தீவு பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும், இது இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியை தீர்க்க உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். 

கொழும்பு துறைமுக நகரத்தை போன்று ஒரு நிலப்பரப்பை உருவாக்கி கடல் ஓரமாக மிருகக்காட்சிசாலையை அமைக்க ஆலோசனை வழங்கினார்.

இதன் மூலம் கடலால் சூழப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட மிருகக்காட்சிசாலையை நிறுவிய முதலாவது நாடாக இலங்கை மாறும் எனவும் 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு