யாழ்.வடமராட்சியில் வழுக்கி விழுந்து இறந்தவருக்கும், தற்கொலை செய்து கொண்டவருக்கும் கொரோனா தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சியில் வழுக்கி விழுந்து இறந்தவருக்கும், தற்கொலை செய்து கொண்டவருக்கும் கொரோனா தொற்று..!

யாழ்.பருத்தித்துறை - வல்வெட்டித்துறை பகுதிகளில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வல்வெட்டித்துறை - குற்றம் ஒழுங்கையை சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது76) என்பவர் வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

அவருக்கு இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

மேலும் பருத்தித்துறை - 1ம் கட்டை சந்தியில் மரக்காலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட 21 வயதான இளைஞருக்கும் இறப்பின் பின் கொரோனா தொற்று உறுதியானது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு