யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை..! 183 குடும்பங்கள் பாதிப்பு, 4 வீடுகள் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை..! 183 குடும்பங்கள் பாதிப்பு, 4 வீடுகள் சேதம்..

யாழ்.மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையினால் சுமார் 183 குடும்பங்களை சேர்ந்த சுமார் 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் கூறியிருக்கின்றார். 

தற்போதைய காலநிலை நிலவரம் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் நேற்று முதல் மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசியுள்ளது.  

இதனால் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனரென தெரிவித்தார்.

இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு 

சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு