யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் எந்தவேளையிலும் தீவிரமடையலாம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் எந்தவேளையிலும் தீவிரமடையலாம்..! மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்திற்கு வெளிமாவட்டத்திலிருந்து டெங்கு நோயாளி ஒருவர் நுழைந்தால் எப்போது வேண்டுமானாலும் டெங்கு பரவல் உருவாகலாம். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கொவிட் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் நாங்கள் செய்த நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது.

டிசம்பர் 6 முதலான ஒரு வார காலப்பகுதி யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை சிரமதானம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு