பொலிஸார் கூறியுள்ளதால் வல்வெட்டித்துறை - தீருவில் திடலில் மாவீரர் நாள் நடாத்த அனுமதிக்க மாட்டோம்! நகரசபை தவிசாளர் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
பொலிஸார் கூறியுள்ளதால் வல்வெட்டித்துறை - தீருவில் திடலில் மாவீரர் நாள் நடாத்த அனுமதிக்க மாட்டோம்! நகரசபை தவிசாளர் கூறுகிறார்..

யாழ்.வல்வெட்டித்துறை - தீருவில் திடலில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்த இடமளிக்கவேண்டாம். என பொலிஸார் கூறியுள்ளதால், இடம் வழங்க முடியாது. என வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் ச.செல்வேந்திரா கூறியுள்ளார். 

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் , மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார். 

 அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால், இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாரினால் தனக்கு கூறியுள்ளதால், 

தங்கள் கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்வதாக எழுத்து மூலம் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு