யாழ்.பருத்தித்துறை நகரசபையின் பாதீட்டில் கலந்து கொண்டிருந்த நபருக்கு கொரோனா தொற்ற உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை நகரசபையின் பாதீட்டில் கலந்து கொண்டிருந்த நபருக்கு கொரோனா தொற்ற உறுதி..!

யாழ்.பருத்தித்துறை நகரசபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்த நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நகரசபையின் பாதீடு தவிசாளரால் நேற்று முன்வைக்கப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 5 பேரும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்டை ஆகியவற்றின் உறுப்பினர் தலா ஒருவர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 6 பேரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் எதிராக வாக்களித்தனர். அதனால் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் சமநிலை காணப்பட்டதனால் 

உள்ளூராட்சி மன்றச் சட்டத்துக்கு அமைய தவிசாளர் தனது வாக்கை ஆதரவாக வாக்களித்து ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. 

இந்த வாக்கெடுப்பின்போது கலந்துகொண்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் உடல்நலக் குறைவுடன் காணப்பட்டுள்ளார்.

அவர் வாக்கெடுப்பின் பின்னர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்குச் சென்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால் அவர் மருத்துவமனை விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு