யாழ்.இந்திய துணை துாதர் விடுதலை புலிகளுக்கு மரியாதை செலுத்தினாரா? துாதரகம் விளக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணை துாதர் விடுதலை புலிகளுக்கு மரியாதை செலுத்தினாரா? துாதரகம் விளக்கம்..

யாழ்.நல்லுார் - சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதாக யாழ்.இந்திய துணை துாதரகம் தொிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் விளக்கமளித்து யாழ்.இந்திய துணைத் துாதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் கடந்த 20 ஆம் திகதி நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற பசுமைக் கண்காட்சி ஒன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு 

மரக் கன்றுகளை வழங்கியிருந்த நிலையில் விடுதலை புலிகளுக்கு மரியாதை செலுத்தியதாக தவறான ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளதை நாம் காண்கின்றோம். அழைப்பின் பிரகாரமே அவர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். 

மேலும் அவருக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாதமையால் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுடனோ உத்தியோகபூர்வ நிகழ்வுக்கு அப்பால் அவர்களின் செயற்பாடுகளுடனோ 

எந்தவிதத்திலும் இணைத்துப்பார்க்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு