துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது மோதிய டிப்பர்! யாழ்.கோப்பாயில் கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது மோதிய டிப்பர்! யாழ்.கோப்பாயில் கோர விபத்து..

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

படுகாயமடைந்தவன் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி குணராசா என கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் 

நாவற்குழி பகுதியை நோக்கி திரும்பிச் சென்றபோது துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு