யாழ்.மட்டுவில் பகுதியில் நடந்த கொடூரம்..! பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயதான தாய் உட்பட இரு பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் பகுதியில் நடந்த கொடூரம்..! பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற 18 வயதான தாய் உட்பட இரு பெண்கள் கைது..

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தையை நிலத்தில் புதைப்பதற்கு குறித்த பெண்ணும் அவருடைய தாயாரும் முயன்றனர். 

இதன்போது குழந்தை அழுததால் அயலவர்கள் அங்கு விரைந்து அசம்பாவிதத்தை தடுத்து குழந்தையை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு