மாவீரர் நாளுக்கு தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தள்ளுபடி..!

ஆசிரியர் - Editor I
மாவீரர் நாளுக்கு தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் தள்ளுபடி..!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்க தடைகோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார் 5 நபர்களுக்கு எதிராகவும் நெடுந்தீவு பொலிசார் ஒருவருக்கு எதிராகவும் 

மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்க தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மனுவை தாக்கல் செய்தனர். 

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, கனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்டோர் முன்னிலையாகி வாதிட்டனர். 

இதனை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் பொலிஸாரின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு