கடற்படையினரை கண்டதும் கடலில் பாய்ந்த யாழ்.பாசையூர் மீனவரை காணவில்லை..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மண்டைதீவு - பூவரசந்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் வருவதை கண்டதும் கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த மீனவர் காணாமல்போயுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

பூவரசந்தீவின் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக கடற்படையினர் பதுங்கியிருந்துள்ளனர். 

இந்நிலையில் படகு ஒன்று கரையை நோக்கி வருவதை அவதானித்த கடற்படையினர் தயாரானபோது கடற்படையினரை கண்டவர் படகிலிருந்து கடலில் பாய்ந்துள்ளார். 

கடலில் பாய்ந்தவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. என கூறப்படுகின்றது. எனினும் குறித்த சம்பவம் கரைக்கு அருகில் இடம்பெற்றதாகவும், 

மீனவர் கடலில் குதித்த இடத்திலிருந்து 5 அல்லது 10 நிமிடங்கள் நீந்தினால் கரையை அடைந்துவிடலாம் எனவும் கூறப்படுகின்றது. 

சம்பவத்தில் யாழ்.பாஷையூர் பகுதியை சேர்ந்த மீனவரே காணாமல்போயுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு