யாழ்.தாவடியில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து..! மாணவியும், தந்தையும் ஆபத்தான நிலையில், பேருந்தில் வெறும் இரும்பு மட்டுமே உள்ளதாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தாவடியில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து..! மாணவியும், தந்தையும் ஆபத்தான நிலையில், பேருந்தில் வெறும் இரும்பு மட்டுமே உள்ளதாம்..

யாழ்.தாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

இன்று காலை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் தரம் 8B ல் கல்வி கற்கும் ப.சரணிகா என்ற மாணவியும் தகப்பனுமே படுகாயமடைந்துள்ளனர்.

இலக்கத்தகடற்றுக் காணப்படும் குறித்த பேருந்து மிகவும் பழையது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு