யாழ்.மாவட்ட மக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அதிக ஆபத்துள்ள 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 3வது டோஸ் வழங்கும் நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்திருக்கின்றார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்களில் 

ஏற்கனவே சினோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் அத் தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக்குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் யாழ்.போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், 

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நோய் நிலமையால் அல்லது அதற்கு பெற்றுக்கொண்ட சிகிச்சையினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயுடையவர்கள், உறுப்பு மாற்று (உதாரணமாக சிறுநீரகம், ஈரல் மற்றும் சுவாசப்பை) 

மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், புற்றுநோயுடையவர்கள் மற்றும் புற்றுநோய்க்கு தற்போது சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்கள், 

மண்ணீரல் தொழிற்பாடு குறைந்தவர்கள் அல்லது நோய்நிலையின் நிமித்தம் மண்ணீரல் அகற்றப்பட்டவர்கள், மருத்துவரினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு 

இதன்போது முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை 

மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் இம்மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு