யாழ்.நகரில் வீடு உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்! யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் வீடு உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்! யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தகவல்..

யாழ்.நகரில் 1ம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கடந்த 1ம் திகதி யாழ்.நகரில் முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் வீடு உடைக்கப்பட்டு ஆறு பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறையிடப்பட்டிருந்தது.முறைப்பாடு தொடர்பில் யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆறரைப் பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு