வீட்டுக்குள் புகுந்து இளம் குடும்ப பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்து இளம் குடும்ப பெண்ணை கட்டிவைத்துவிட்டு கொள்ளை..! பொலிஸார் தீவிர விசாரணை..

முல்லைத்தீவு - பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை கட்டிவைத்துவிட்டு வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் தொலைபேசியை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். 

குறித்த சம்பவம் 19ம் திகதி நள்ளிரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூதன்வயல் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இளம் குடும்ப பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள் 

வீட்டில் இருந்த பெண்ணின் கை,கால்களை கட்டிவைத்துவிட்டு சுமார் 25 இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளார்கள். 

கணவனை பிரிந்த நிலையில் தனது பிள்ளைகளை யாழ்ப்பாணத்தில் விடுதியில் தங்கி படிக்கவைத்துவிட்டு தனிமையில் இருந்த பெண்ணிடமே கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளார்கள்.

16 பவுண் நகை, 5 இலட்சம் ரூபா பணம், மற்றும் பெறுதியான தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. 

என முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று தடையவியல் பொலிஸார் வரவளைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு