மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி அதிபரின் பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி அதிபரின் பிள்ளைகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

திடீர் சுகயினமடைந்த நிலையில் உயிரிழந்த யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லுாரி உப அதிபரின் பிள்ளைகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கடந்த 17ஆம் திகதி வீரசிங்கம் மத்திய கல்லூரியின் உப அதிபர் திடீர் உடல்நலப் பாதிப்புக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்திருந்தார்.

அவருடைய கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியின் சில வகுப்புக்களும் மூடப்பட்டிருந்தன. 

இந்நிலையில், மரணம் நிகழ்ந்த அன்று  உப அதிபர் சாவகச்சேரியில் தன்னை அன்டின் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் அன்று மாலையே அவர் உயிரிழந்திருந்தார். அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று அன்டிஜன் அறிக்கை தெரிவித்திருந்ததால் பாடசாலை ஆசிரியர்கள், நண்பர்கள் என பெருமளவானோர் இறுதிச் சடங்களில் பங்குகொண்டிருந்தனர்.

இன்று சுகாதாரப் பிரிவினர் உயிரிழந்த உப அதிபரின் இல்லத்தில் அவருடைய பிள்ளைகளுக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருடைய பிள்ளைகள் மூவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, அயலவர்களில் இருவரக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு