நீதிமன்ற பிடியாணைக்கு அமைய கைது செய்ய சென்ற யாழ்.பொலிஸார் மீது மனைவியுடன் சேர்ந்து தாக்குதல் முயற்சி.. ஒருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
நீதிமன்ற பிடியாணைக்கு அமைய கைது செய்ய சென்ற யாழ்.பொலிஸார் மீது மனைவியுடன் சேர்ந்து தாக்குதல் முயற்சி.. ஒருவர் கைது..!

நீதிமன்ற பிடியாணைக்கு அமைவாக கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அருண் சித்தார்த் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெரோயின் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை  அடிப்படையில் கைது செய்வதற்கு யாழ்.பொலிஸார் இன்று அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அருண் சித்தார்த் மற்றும் அவரது மனைவி, பொலிஸார் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பொலிஸார் அருண் சித்தார்த்தை கைது செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு