ஆட்காட்டிவெளி துயிலுமில்ல சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு!

ஆசிரியர் - Admin
ஆட்காட்டிவெளி துயிலுமில்ல சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு!

மன்னார்- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம், இனந்தெரியாதோரினால் இடித்தழிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.

துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ள போது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.  

பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை தகவல் கிடைத்ததும் நானும் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும், மன்னார் நகரசபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் சென்று பார்வையிட்டோம்.

எனவே இவ்வாறு தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பம் அடையலாம்.

தமிழ் மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் மாவீரர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு