தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் மரணம்! யாழ்.சாவகச்சோியில்..

ஆசிரியர் - Editor I
தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் மரணம்! யாழ்.சாவகச்சோியில்..

யாழ்.சாவகச்சோியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு சொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபர் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், 

இவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.இந்நிலையில், திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அம்பியூலன்ஸ் வாகனத்திற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அம்பியூலன்ஸ் வாகனம் சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது.எவ்வாறாயினும், அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே 

அம்பியூலன்ஸ் வண்டிக்குள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு