நல்லுார் கந்தசுவாமி ஆலய 10வது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல்.

ஆசிரியர் - Editor I
நல்லுார் கந்தசுவாமி ஆலய 10வது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல்.

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் 10வது நிர்வாகி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் இன்று(19) கையளிக்கப்பட்டது. 

அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாண பண்பாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோல் கையளிக்கப்பட்டது. 

 நல்லூர் கந்தசுவாமி கோவில் சிவச்சாரிகளால் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் நல்லூர் ஆலயத்தில் வைத்து பிற்பகல் 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு