முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை!

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க 64 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 07 பொலிஸ் நிலையங்களின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அடிப்படையில், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தின் ஊடாக 12 பேருக்கும், முள்ளிவளை பொலிஸ் நிலையத்தின் ஊடாக 11 பேருக்கும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் ஊடாக 03 பேருக்கும், மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக 09 பேருக்கும், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக 14 பேருக்கும், ஐயங்கன்குளம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக 08 பேருக்கும், மல்லாவி பொலிஸ் நிலையத்தின் ஊடாக 07 பேருக்கும் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை விஜயகுமார், கனகசுந்தரசுவாமி ஜனமேஜெயந், சிவபாதம் குகனேசன் ,சமூக செயற்பாட்டாளர்களான தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்), இசிதோர் அன்ரன் ஜீவராசா,பேதுருப்பிள்ளை ஜெராட்,தவராசா கணேஸ்வரன் ,சபாரத்ணம் யோகநாதன், ஜேசுதாசன் பற்றிக் யூட் ,வேலுப்பிள்ளை தியாகராசா , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ஆகியோர் மற்றும் அவர்களது குழுவினர், ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஐயங்கன்குளம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துயன் ,சங்கரப்பிள்ளை நாகரத்தினம் ,காசிப்பிள்ளை கருணாகரன் ,கந்தசாமி சந்திரசேகரன்,தங்கராசா நிறஞ்சன் ஆகியோர் மற்றும் அவர்களது குழுவினர்,ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்லாவி பொலிஸ் நிலையத்தின் ஊடாக அருட் தந்தை நேசன் குலாஸ் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா,துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சற்குணநாதன் சுஜன்சன் ,சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன்,தங்கராசா நிறஞ்சன் பத்மநாதன் ஸ்ரீகரன் ,மகாதேவன் ஆனந்த் ஆகியோர் மற்றும் அவர்களது குழுவினர், ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன் ,குஞ்சிதபாதம் ரவீந்திரன்,ராசமணி சிவராசா,மகாதேவன் ஆனந்த் , சுப்பிரமணியம் பரமானந்தம் ஆகியோர் மற்றும் அவர்களது குழுவினருக்கு தடை கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு