பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டல் வெளியானது..! சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டல் வெளியானது..! சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டில் வெளியிடப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், செயற்படும் விதம் தொடர்பிலும் புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். 

அத்துடன், கோவிட் கொத்தணிகள் உருவாகும் என அச்சம் காணப்படுகின்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு