அயல் வீட்டாருடனான தகராறு வாள்வெட்டில் முடிந்தது..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம், குடும்பஸ்த்தர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அயல் வீட்டாருடனான தகராறு வாள்வெட்டில் முடிந்தது..! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம், குடும்பஸ்த்தர் படுகாயம்..

யாழ்.சுன்னாகம் - அம்பனை பகுதியில் நேற்றய தினம் குடும்பஸ்த்தர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரே இலக்காகியுள்ளார்.

அயல் வீட்டாருடனான தகராறு முற்றியதில் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான 55 வயதுடைய குடும்பஸ்தர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வாள்வெட்டு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு