யாழ்.பல்கலைகழகத்தில் கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடவும் கெடுபிடி..! கெடுபிடிகளை தாண்டி விளக்கேற்றிய மாணவர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடவும் கெடுபிடி..! கெடுபிடிகளை தாண்டி விளக்கேற்றிய மாணவர்கள்..

யாழ்.பல்கலைகழகத்தில் கெடுபிடிகளை மீறி மாணவர்கள் கார்த்திகை விளக்கீட்டை தீபமேற்றி கொண்டாடியுள்ளனர். 

கார்த்திகை விளக்கீடு இன்று கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு கெடுபிடிகளை தாண்டி பல்கலைகழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. 

இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் சென்றுள்ளனர். 

இதன்போது பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களால் வழிமறிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மாணவர்கள் உள்நுழைய அனுமதியும் மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டுரீதியான செயற்பாடுகளை மேற்க்கொள்ளவும் 

தடை விதிப்பதா என மாணவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழகத்திற்குள் சென்று கார்த்திகை விளக்கீட்டு தீபங்களை ஏற்றியுள்ளனர்.

கடந்த வருடம் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 

பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு