நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது..!

கார்த்திகை தீப திருநாளில் நாவலர் கலாச்சார மண்டபத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்ட நாவலர் திருவுருவச் சிலை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வெளிவந்த நிலையில், தற்போது நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு