வடமாகாணத்தில் கனமழை..! வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை, 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் கனமழை..! வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை, 100 மில்லி மீற்றர் மழை பெய்யும்..

வடமாகாணத்திற்கும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று பிற்பகல் 01 மணி முதல் நாளை பிற்பகல் 01 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும். 

இக்காலப்பகுதியில் மேற்குறித்த பகுதி மக்கள் அவதானித்துடன், இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை நாளை 18ம் திகதி அடைய வாய்ப்புள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட மாகாணத்தின் சில இடங்களிலும் புத்தளம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்,

எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு