யாழ்ப்பாணப் பெண் கொலையா? - இளைஞனுக்கு வலைவீச்சு.

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணப் பெண் கொலையா? - இளைஞனுக்கு வலைவீச்சு.

மன்னார் - கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

கடந்த 13ஆம் திகதி குறித்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான கீர்த்தனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 குறித்த யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பணி முடிந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார்.

 இதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேருந்து நிலையத்தில் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.

 பின்னர் வியாழக்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்திலிருந்து அப்பெண் குதித்த நிலையில் கடந்த 13ஆம் திகதி பெண்ணின் சடலம் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.  இது கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில், குறித்த பெண்ணுடன் பேருந்து நிலையத்தில் இருந்த இளைஞரைக் கண்டறியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு