வடமாகாண மாணவர்கள் கடந்த 10 வருடங்களில் க.பொ.த சாதாரண தரத்தில் பெற்ற அடைவு மட்டங்களை ஆராய ஆளுநர் திட்டம்! காரணம் என்ன?

ஆசிரியர் - Editor I
வடமாகாண மாணவர்கள் கடந்த 10 வருடங்களில் க.பொ.த சாதாரண தரத்தில் பெற்ற அடைவு மட்டங்களை ஆராய ஆளுநர் திட்டம்! காரணம் என்ன?

வடமாகாணத்தின் கல்வி நிலை தொடர்பிலான கடந்த 10 வருடங்களுக்குரிய க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளை மதிப்பீடு செய்ய ஆளுநர் ஜீவன் தியாகராஜா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மாகாணத்தின் கல்வி நிலைமை தொடர்ச்சியாக பின்நோக்கி செல்வது தொடர்பில் பல்வேறு தரப்பக்களால் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் நிலையில் ஆளுநர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இதன்படிடையில் கடந்த 10 வருடங்களில் க.பொ.த சாதாரண தரத்தில் மாணவர்களின் பெறுபேறுகளை ஆராய்வதன் ஊடாக அடுத்தகட்டம் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து தீர்மானிக்க

ஆளுநர் இத்தயை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு