யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு குழந்தைகள் உட்பட வடக்கில் 21 பேருக்கு தொற்று!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு குழந்தைகள் உட்பட வடக்கில் 21 பேருக்கு தொற்று!

வடமாகாணத்தில் 2 வயதான குழந்தைகள் இருவர் உட்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 175 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த  2 வயதான குழந்தைக்கும், 

வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்ட ஒன்றைரை வயது குழுந்தை உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2 பேருக்கும், 

மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், மல்லாவியில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் 2 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், 

முல்லைத்தீவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு