நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் அடுத்தவாரம் ஆரம்பம்! கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் அடுத்தவாரம் ஆரம்பம்! கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அறிவித்துள்ளார். 

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

தற்போது, ​​ஆரம்பப் பிரிவு மற்றும் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு