வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை! பலமான காற்றும் வீசும், வளிமண்டலவியல் திணைக்களம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை! பலமான காற்றும் வீசும், வளிமண்டலவியல் திணைக்களம்..

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும். என வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது. 

இதன்படி அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்க ளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாடு முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு