யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான 3 ரயில் சேவைகளும் இன்று நிறுத்தம்! புகைரத திணைக்களம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான 3 ரயில் சேவைகளும் இன்று நிறுத்தம்! புகைரத திணைக்களம் அறிவிப்பு..

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படும் என ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்திருக்கின்றார். 

இதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. 

குறித்த ரயில் பாதையை சீர்செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பணி நிறைவடையும் வரை, பிரதான பாதையிலான தொடருந்து சேவைகள், 

கொழும்பு கோட்டையிலிருந்து வியாங்கொடை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள பொறியியலாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு