யாழ்.சாவகச்சோி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு “தமிழ்தேசிய பற்றாளன்” கௌரவம் வழங்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றியம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு “தமிழ்தேசிய பற்றாளன்” கௌரவம் வழங்கிய முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றியம்..

யாழ்.சாவகச்சோி நகரசபையின் முன்னாள் தவிசாளர் தேவசகாயம்பிள்ளைக்கு “தமிழ்தேசிய பற்றாளன்” கௌரவத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றியத்தால் இந்த கௌவரம் வழங்கப்பட்டது. 

தேவசகாயம்பிள்ளை இலங்கை தமிழரசு கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து களப்பணியாற்றி தமிழ்தேசியக் கூட்டமைப்பினூடாக சாவகச்சேரி நகர பிதாவாக உயர்ந்தவர். 

தன்னுடைய பதவிக் காலத்தில் நகர அபிவிருத்தியோடு மட்டும் நின்றுவிடாமல் தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டங்கள் பலவற்றில் பங்கெடுத்ததோடு பல போராட்டங்கள் வெற்றி அடையவும் தன்பங்களிப்பை செய்தவர்.

அவர் இறுதி வரையும் தடம் மாறாத தமிழ்தேசிய சிந்தனையோடு வாழ்ந்தவர் என்பதால் தமிழ்தேசிய பற்றாளன் எனும் கௌரவம் முன்னாள் தவிசாளர் தேவசகாயம்பிள்ளைக்கு பொருத்தமானது. 

என முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் ஒன்றியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு